தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 40 பேர் பலி

தெலங்கானாவில் பள்ளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-09-11 08:45 GMT
தெலங்கானா மாநிலம் ஜக்டியல் மாவட்டத்தில் உள்ள கொண்டகாட்டு என்ற இடத்தில், ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். மேலும் ஏராளமான பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். அவர்களில் மேலும் 10 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. பேருந்து விபத்து குறித்து தகவலறிந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்