பிரதமர் மோடியுடன் இலங்கை எம்.பி.க்கள் குழு சந்திப்பு

பிரதமர் மோடியை, இலங்கையில் இருந்து வந்த எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.

Update: 2018-09-11 02:31 GMT
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் அந்நாட்டு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், டெல்லி வந்துள்ளனர். அவர்கள், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே, சமீப காலமாக  நட்புறவு அதிகரித்து வருவதற்காக இலங்கை எம்பிக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மக்கள் நல திட்டங்கள் பற்றியும் மோடியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளிலும் உள்ள மாநில அரசுகள் மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளிடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்த, புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அது, இரு நாட்டு மக்களிடையே நேரடி தொடர்பை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்