கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது

கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-08-31 06:49 GMT
கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 400 கோடி ரூபாய், நிவாரண நிதிக்கு வந்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் ஆன்-லைன் மூலம், நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளனர். ஆன்-லைன் மூலமாக 145 கோடியே 17 லட்சமும், யு.பி.ஐ. மூலம் 46 கோடியும், காசோலை மற்றும் நேரில் 835 புள்ளி 86 கோடி ரூபாயும் நிவாரண நிதிக்கு வரப்பெற்றுள்ளதாக  கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்