ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2018-08-29 10:26 GMT
காஷ்மீரில் உள்ள அனந்தநாக்  மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அங்கு பதுங்கியிருந்த  தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த அல்தஃப் அஹ்மத் மற்றும் உமர் ரஷித் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என்பதால், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்