வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுக்க ஆலோசனை

வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன், வாட்ஸ் ஆப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-08-22 04:11 GMT
வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும், வதந்தியால் பல்வேறு இடங்களில் வன்முறை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக மத்திய அரசு, சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, வாட்ஸ் ஆப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்து பேசினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது, வாட்ஸ் ஆப்பில் வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து  ஆலோசனை நடத்தப்பட்டது.  மேலும் வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்