லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி

காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார்.

Update: 2018-08-14 13:35 GMT
* காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார். 

* அங்குள்ள கடிகார கோபுரம் பகுதியில் கொடியேற்ற முயன்ற அவரை, அந்த பகுதியின் உள்ளூர் மக்கள் அடித்து உதைத்தனர். 

* இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்து துணை ராணுவப்படையினர் விரைந்து சென்று அந்த நபரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றனர்.  

* தேசிய கொடியை ஏற்றியவரை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்