"நிதியுதவி அளித்த கமல், சூர்யாவுக்கு நன்றி" - பினராயி விஜயன்
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாக தொடர்பு கொண்டு, மேலும் உதவ தயாராக இருப்பதாக உறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அரசுகளுடன், கமல்ஹாசன், சூர்யா போன்ற திரையுலகினரும் உதவி இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.