தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும், ஈரப்பதத்தின் காரணமாக பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-12 11:10 GMT
தீவிரம் அடைந்து வரும் தென் மேற்கு பருவமழை

தீவிரம் அடைந்து வரும் தென் மேற்கு பருவமழையால் மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழை தொடரும் எனவும் வட மேற்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதேபோல், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி கோவை,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்