தாஜ்மகாலில் வெளிநபர்கள் தொழுகை நடத்த தடை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில், வெளி நபர்கள் தொழுகை நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Update: 2018-07-10 07:37 GMT
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில், வெளி நபர்கள் தொழுகை நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை தோறும், ஆக்ராவைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகின்றனர். இந்நிலையில், தாஜ்மஹால் 7 உலக அதிசயங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு, தொழுகை நடத்த பல்வேறு மசூதிகள் உள்ளன, தாஜ்மஹாலுக்கு ஏன் செல்ல வேண்டும் எனக் கூறி, தொழுகை நடத்த அனுமதி கோரிய, மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்