அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு - பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-06-28 08:15 GMT
அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அங்குள்ள சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் விஜயா என்ற தமிழ் ஆசிரியை கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரை குடியாத்தம் பகுதியில் இயங்கும் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேந்தமங்கலம் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த முதன்மை கல்வி அலுவலர்,  பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 


Tags:    

மேலும் செய்திகள்