"காரைக்காலில் வேளாண் பல்கலைக் கழகம்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வேளாண் பல்கலைக்கழகமும், காலாப்பட்டில் பொறியியல் பல்கலைக்கழகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Update: 2018-06-22 05:13 GMT
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வேளாண் பல்கலைக்கழகமும், காலாப்பட்டில் பொறியியல் பல்கலைக்கழகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி, இந்த தகவலை வெளியிட்டார். மேலும், புதுச்சேரி மாநில அரசுப் பணிகளில் கொல்லைப் புறம் வழியாக சேர்ந்தவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் நிலவுவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்