"அந்தமாதிரி படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன்" - நடிகை மாளவிகா மோகனன் சபதம்...

Update: 2023-07-31 12:38 GMT

"அந்தமாதிரி படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன்" - நடிகை மாளவிகா மோகனன் சபதம்...

இனிமேல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் என, நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 500 கோடி ரூபாய் வசூலிக்கக்கூடிய படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லையெனில் அப்படத்தில் நடிக்க மாட்டேன் எனவும், வசூலை குவிக்கும் படமானாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகள் ஷோபனா, ஊர்வசி, கனோல் போல நினைவில் தங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்