என்னது அரண்மனை - 4 படம் ரூ.100 கோடி வசூலா? - சத்தமின்றி பாக்ஸ்ஆபிஸில் சம்பவம்

Update: 2024-05-23 05:56 GMT

சுந்தர்.சியின் அரண்மனை-4 திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியிடப்பட்டு வரும் இப்படத்தின் 4வது பாகம் கடந்த 3-ம் தேதி வெளியானது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், உலகம் முழுவதும் 19 நாட்களில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுந்தர்.சிக்கு முதல் 100 கோடி வசூலித்த படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்