"உயிருக்கு பாதுகாப்பு அளிக்காத அரசுகள் அகற்றப்பட வேண்டும்"- கமல்ஹாசன்

மனித உயிர்கள் முக்கியம் என்பதை உறுதி செய்யாத அரசு, அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2020-07-01 17:00 GMT
மனித உயிர்கள் முக்கியம் என்பதை உறுதி செய்யாத அரசு, அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 3 மாதங்களில் 2-வது விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொதிகலன் வெடித்து சிதறி தீப்பற்றியது. இதுபோன்ற விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரிப்பதாக கூறிய கமல்ஹாசன்  லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம் என்றார். இதை உறுதி செய்யாத அரசுகள், அகற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்