செம்மனூர் ஜூவல்லரி திறப்பு விழா : ரசிகர்களுடன் நடனமாடிய விஜய்சேதுபதி

செம்மனூர் ஜூவல்லரி திறப்பு விழா : ரசிகர்களுடன் நடனமாடிய விஜய்சேதுபதி

Update: 2018-12-19 14:30 GMT
சென்னை அண்ணா நகரில், செம்மனூர் இண்டர்நேஷனல் ஜீவல்லரி குழுமத்தின் 45 ஆவது கிளை திறக்கப்பட்டுள்ளது. இதனை, நடிகர் விஜய் சேதுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பங்கேற்றவர்களில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கு தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சென்னையைச் சேர்ந்த ஏழை குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ரசிகர்களுடன் விஜய்சேதுபதி நடனமாடினார்.
Tags:    

மேலும் செய்திகள்