நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் : காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார்.

Update: 2018-11-05 09:11 GMT
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார். படப்பிடிப்பின் போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், கப்பன் பாக் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். புகார் குறித்து விளக்கமளிக்க வருமாறு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அர்ஜூன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்