"எனக்கு அவன் தான் வேணும்.." ரூ.2,500 கோடியை தூக்கி எறிந்த காதலி - மனதை உருக்கும் உண்மை காதல்

x

தன் காதலனைக் கரம் பிடிக்க மலேசிய பெண் ஒருவர் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை உதறித் தள்ளிய நெகிழ்ச்சிகர சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது.

பணத்தை நோக்கி பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகத்தில் உண்மைக் காதலுக்கான மதிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது... பொருளாதாரப் பின்னணி இல்லாத கதாநாயகனைக் கரம் பிடிக்க, சொத்துகளை துச்சமென உதறித் தள்ளும் கதாநாயகிகளை எல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம்.

ஆனால், மலேசியாவில் ஒரு பெண் உண்மையாகவே இதை நிகழ்த்தியுள்ளார்... காஹு கே பெங் (Khoo Kay Peng) மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் (Pauline Chai) மகள் தான் இந்த Angeline... ஒரே மகள்... சொத்தின் மதிப்பு 2 ஆயிரத்து கோடி ரூபாய்... ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த போது ஜெடியா ஃப்ரான்சிஸ் என்பவருடன் ஏஞ்சலின் காதலில் விழ, இவர்களின் திருமணத்திற்கு ஏஞ்சலின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சொத்தில் உரிமை கொண்டாட முடியாது என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது... காதலனா? சொத்தா? என்று வந்த போது காதலனே பணத்தை விட பெரியாய்த் தெரிய, கொஞ்சமும் யோசிக்காமல் தன் சொத்துகளை தூக்கிப் போட்டு விட்டு, ஜெடியாவைக் கரம் பிடித்த ஏஞ்சலின் உண்மையிலேயே ஒரு ஏஞ்சல் தான்... இந்த ஜோடி கடந்த 2008ல் திருமணமும் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது... ஆனால் இப்போது தான் இந்த விஷயம் வெளியிலேயே தெரிந்திருக்கிறது. காரணம், பணத்திற்கு முன்னாள் மகளையே விட்டுத் தந்த ஏஞ்சலின் பெற்றோரின் விவாகரத்து தான். தாயின் சார்பாக சாட்சியளித்த ஏஞ்சலின், தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். திருமணமே நடந்தாலும், கோடிக் கணக்கில் சொத்துகள் குவிந்தாலும், காதல் என்ற அச்சாணி இல்லையென்றால், அந்த பந்தம் நிலைத்து நிற்காது என்பதற்கு இது ஒரு சான்று.


Next Story

மேலும் செய்திகள்