ஐ.நா. அமைதிப்படையை உடைத்த ராக்கெட்.. பேராபத்தில் மூக்கை நுழைத்த நாடு..?

x

தெற்கு லெபனானின் நகோரா நகரில் செயல்பட்டு வரும் லெபனானுக்கான ஐ.நாவின் இடைக்கால அமைதிப்படையின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற போது, தலைமையகத்திலோ, அங்குள்ள பதுங்கு குழியிலோ, அமைதிப்படை அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால், யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் எங்கிருந்து வந்த‌து? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வை காண அமைதிப்படையினருக்கு வாய்ப்பு தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்