கடைசியாக பார்த்த ஊபர் டிரைவர்...இந்திய மாணவனுக்கு அமெரிக்காவில் கொடூரம் - பேரதிர்ச்சியில் பெற்றோர்

x

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணம், பர்டியூ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா, கடந்த 28ம் தேதி மாயமானதாக, அவரது தாயார், இந்திய தூதக அதிகாரிகளுக்கு, எக்ஸ் தளம் மூலம் பதிவிட்டிருந்தார். கடைசியாக தனது மகனை பல்கலைக்கழகம் அருகில் இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர் ஒருவர் பார்த்ததாக கூறியிருந்தார். இதன்பேரில், மாணவரை போலீசார் தேடி வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்