சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்ப் Vs ஜோ பைடன்...வெளியான கருத்து கணிப்பு - அதிர்ச்சியில் உலக நாடுகள்

x

2024 நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் சர்ச்சைக்குரிய முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். வேட்பாளர் தேர்விற்கான உள்கட்சி தேர்தல்களில் முன்னிலை வகிக்கும் டிரம்ப் மீது நான்கு கிரிமினல் வழக்குகளும், பல்வேறு சிவில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆனால், கருத்துக்கணிப்புகளில் அவர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். சி.என்.என் நிறுவனம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் 49 சதவீத வாக்காளர்கள், டிரம்பை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். ஜோ பைடனை 45 சதவீதத்தினரும், இதர வேட்பாளர்களை 5 சதவீதத்தினரும் ஆதரிப்பதாக கூறியுள்ளனர். 35 வயதிற்கு உட்பட்ட பிரிவினரில் 49 சதவீதத்தினர் ஜோ பைடனையும், 46 சதவீதத்தினர் டிரம்ப்பையும் ஆதரிக்கின்றனர். கருப்பினத்தவர்களில் 57 சதவீதத்தினர் ஜோ பைடனையும், 35 சதவீதத்தினர் டிரம்ப்பையும் ஆதரிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்