கலவரத்தால் நிகழ்ந்த பயங்கரம். பரிதாபமாக உயிரிழந்த 6 பேர்.ஹரியானாவில் தொடரும் பதற்றம்

x

ஹரியானாவில் மத பேரணியின் போது இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், மோதல் நிகழ்ந்த நூஹ் பகுதி எஸ்பி வருண் சிங்லா பிவானி நகருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஐபிஎஸ் நரேந்திர பிஜர்னியா நுஹ் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானாவில் நடந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி உறுதி செய்யப்படும் என்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்க உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்