விமான ஊழியரின் விரலைக் கடித்த பயணி.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

x

விமான ஊழியரின் விரலைக் கடித்த பயணி.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

விமானத்தை அவசரமாக தரையிறக்க வலியுறுத்தி பயணி ஒருவர் குடிபோதையில் விமான ஊழியரின் விரலைக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் இஸ்தான் புல்லில் இருந்து ஜகார்த்தா நோக்கி பயணித்த துருக்கிய விமானத்தில் பயணித்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 48 வயதான முகமது ஜான் ஜெய்ஸ் என்ற பயணி, குடிபோதையில் விமான பணிப்பெண்களைத் தாக்கியுள்ளார்.

சக ஊழியர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்ற போது, அந்த பயணி போதையில் ஏதோ side dishஐக் கடிப்பது போல் விமான ஊழியரின் விரலைக் கடித்துள்ளார்.

இதனால் ஜகார்த்தா நோக்கி பயணித்த அந்த விமானம் அவசரவசரமாக மேடானில் தரையிறக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்