அதிகாலையே அதிர்ந்த பூமி..! நடுங்கிய பாகிஸ்தான், சீனா நாடுகள்..! பீதியில் மக்கள் | Earthquakes

x

பாகிஸ்தான், சீனா, நியூ கினியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் அருகே பாகிஸ்தான் பகுதியில் அதிகாலை 3.38 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, நேபாளம் அருகே, சீனாவின் ஜிஜாங் பகுதியில் அதிகாலை 3.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 140 கிலோ மீட்டர் ஆழத்தில், 5.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நியூ கினியாவின் வடக்கு கடற்கரை அருகே அதிகாலை 3.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.5 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்