ஓடும்போதே பற்றி எரிந்த பஸ்.. யாக குண்டம் போல் வளர்ந்த தீ - ரியலாக நடந்த நம்ப முடியா காட்சிகள்

x

அர்ஜெண்டினாவில், ஓடும் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்திலிருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பியூனோஸ் அர்ஸ் நகரத்தில் உள்ள சாலையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, பேருந்திலிருந்து புகை வெளியே வந்ததால், ஓட்டுநர் உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கி விடப்பட்டனர். காற்றின் வேகத்தால் மளமளவென பரவிய தீ, சாலையை மறித்து சுவர் போல தடுப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ பற்றிய காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்