புதின் செய்த ஒற்றைச் செயல்...துடிதுடித்து உயிரிழந்த...60 உயிர் வெளிவந்த பகீர் உண்மை

x

புதின் செய்த ஒற்றைச் செயல் துடிதுடித்து

உயிரிழந்த 60 உயிர் வெளிவந்த பகீர் உண்மை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஒரு இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 60 பேர் பலியானது அதர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான ISIS-K

அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. சிரியா உள்நாட்டு போரில், சிரியா அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக, ரஷ்ய ராணுவத்தை புதின் அனுப்பியுள்ளதே இதற்கு காரணமாக

கருதப்படுகிறது. சிரிய உள்நாட்டுப் போரில், ஆசாத்தின் அரசுக்கு எதிராக, ஐ.எஸ் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. ரஷ்யாவில் வாழும் இஸ்லாமியர்கள் மீது புதின் அரசு அடக்குமுறைகளை முன்னெடுப்பதாக ஐ.எஸ் அமைப்பு கருதுவதும் இதற்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. மாஸ்கோவில் ஐ.எஸ் அமைப்பினர்

பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக, அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க, அமெரிக்கா பொய் தகவல்களை பரப்புவதாக கூறிய புதின், இதை நிராகரித்து விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்