பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்

x

காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் சனாவின் வீதிகளில்

கூடிய ஆயிரக்கணக்கானோர் ஏமன் மற்றும் பாலஸ்தீனியர்களின் கொடிகளை ஏந்தியவாறு, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். காசாவில் இனப்படுகொலை நடப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், இது மிக கண்டிக்கத்தக்கது என்று கூறினர். காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 ஆயிரத்து 356 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 77 ஆயிரத்து 368 பேர் காயமடைந்துள்ளதாகவும், காசா சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்