ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க வைத்த வெடிகுண்டு - சிதறி பறந்த பணத்தாள்கள்

x

கடந்த ஜூலையில் லண்டனின் நார்த்வுட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தைத் திருட கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தைக் குறி வைத்துள்ளனர். ஒரு திருடன் அங்கிருந்த பெண்ணின் கைகளை இறுக்கி பிடித்துக் கொள்ள, மற்றொரு திருடன் சுத்தியலால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளான்... அப்போது அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பொருத்தி இருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறி பணத்தாள்கள் பறந்தன. அங்கு புகைமூட்டமாக காணப்பட்ட நிலையில், வெஸ்லி ஷெப்பர்ட் மற்றும் பெஞ்சமின் தாம்சன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 98 லட்ச ரூபாயுடன் தப்பி ஓடினர். சில நாட்களுக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர்... இருவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்