ஹமாஸுக்கு வலை வீசும் தாய்லாந்து... பகடைக்காயாக கத்தார், ஈரான், எகிப்து

x

ஹமாஸ் பிடியில் உள்ள தாய்லாந்து நாட்டவரை மீட்கும் முயற்சிகளை அந்நாடு தீவிரமாக மேற்கொண்டுள்ளது... ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு பிராந்தியங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஹமாசுடன் தொடர்பு கொண்டு அவர்கள் வசம் உள்ள தாய்லாந்து பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்க முடியும் என்றும் தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹமாசால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 23 பேர் தாய்லாந்து நாட்டவர் ஆவர்... இந்நிலையில், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டிய தாய்லாந்தின் கோரிக்கையை ஹமாஸுக்கு அனுப்ப கத்தார், ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ளதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்