உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..சாய்ந்த 10 மாடி கட்டடம் - உயர்ந்த பலி எண்ணிக்கை

x

#taiwanearthquake | #earthquake

உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..சாய்ந்த 10 மாடி கட்டடம் - உயர்ந்த பலி எண்ணிக்கை

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில், நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 7 புள்ளி 3 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, அங்குள்ள யுரேனஸ் என்ற 10 மாடி கட்டடம் நிலநடுக்கத்தால் சாய்ந்தது. முழுவதும் சரிந்து விழாத அந்த கட்டடத்திலிருந்த குடியிருப்புவாசிகளை, மீட்புக்குழுவினர் வெளியேற்றினர். தொடர்ந்து பெரிய கற்களை போட்டு, கட்டடம் மேலும் சாயாமல் இருக்கும் வகையில் நிறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்