திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. தூக்கத்திலே பிரிந்த 113 உயிர்கள் - காரணமே தெரியாமல் கோடூரம்..

x

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 113 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய வடக்கு நைஜீரியாவின் பிளாடுவா மாநிலத்தில் உள்ள முசு கிராமத்தில் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை நடந்த தாக்குதலில் 113 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு, கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வழக்கமாக மோதல் ஏற்படும் என்றும், முஸ்லீம் கிறிஸ்துவ மக்களுக்கு இடையே பிரச்சினை இருந்த‌தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தாக்குதலுக்கான காரணங்கள் ஏதும் தெரியாத நிலையில், இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த கிராமத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்