சியாரன் புயல்.. சிக்கிய மக்கள் - ஒரு காட்டு காட்டிய கனமழை - 7 பேர் பலி.. மிதக்கும் இத்தாலி

x

சியாரன் புயல் இத்தாலியை சூறையாடியதில் ஒருவர் உயிரிழந்தார்... பிராட்டோ நகரில் தனது வீட்டில் 85 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், வடகிழக்கு வெனிட்டோ பகுதியில் மற்றொரு நபர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியாரன் புயலால் வடமேற்கு ஐரோப்பாவில் பல பள்ளிகள், விமான நிலையங்கள், ரயில், போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன... மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்... பாபெட் புயலைத் தொடர்ந்து வந்துள்ள சியாரன் புயல் வடக்கு அயர்லாந்திலும் பிரிட்டனின் சில பகுதிகளிலும் கனமழையை கொட்டித் தீர்க்கச் செய்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்