சிறுமி மரணம்.. பற்றி எரியும் தீவு தேசம்

x

இலங்கையின் வ‌வுனியாவில் உள்ள தரணிக்குளம் கிராமத்தில், 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்ப‌தாக கூறி, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பெண்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ போதைப்பொருட்களே காரணம் என வேதனை தெரிவித்தனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முழக்கமிட்டவாறு, சிறுமியின் வீட்டில் இருந்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக சென்று ஈச்சங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சிறுமியின் மரணத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்த‌தை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்