திடீரென கிராமத்திற்குள் புகுந்த முதலை - ஆக்ரோஷமாய் கடிக்க பாயும் காட்சிகள்

x

இலங்கையிலுள்ள அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்குள், 9 அடி நீள முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் முதலையை பிடித்து சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதாக கூறும் அப்பகுதி மக்கள், இதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்