தமிழக மீனவர்களை மிரட்டி கொள்ளை... இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்

x

நாகை மாவட்டம் ஆறுகாட்டுதுறை பகுதியில் இருந்து, 13 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 பைபர் படகுகளில் வந்த 6 இலங்கை கடல் கொள்ளையர்கள் வழிமறித்துள்ளனர். அவர்கள் தமிழக மீனவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி, செல்போன்கள், ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள், டீசல் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு விரட்டி அடித்துள்ளனர். பின்பு ஆற்காட்டுதுறை கடற்கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்களிடம், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்