எல்லையில் பொழியும் ராக்கெட் குண்டு மழை.. கொழுந்துவிட்டு எரியும் குடியிருப்புகள்.. | Isreal War

x

காசா மீதான இஸ்ரேல் ராணுவ தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் , லெபானிலிருந்து இஸ்ரேலின் எல்லை பகுதியில் உள்ள கிர்யாத் ஷ்மோனோ நகர் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. குடியிருப்பு பகுதியையொட்டி நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பலத்த சேதர் ஏற்பட்டது. குடியிருப்புகள் மற்றும் கார்

உள்ளிட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு

விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் வசித்த மக்களை ஏற்கனவே வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட நிலையில்

ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்