யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணி

x

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பேரணி நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தினை ஓட்டி யாழ்ப்பாணத்தில், இலங்கை உள்நாட்டு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, போரின் போது காணமால் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்