இயற்கையின் கோர பசியில் 38 பேர் பரிதாப பலி - தத்தளிக்கும் கென்யாவின் அவல காட்சிகள்

x

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொட்டி வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அந்நாட்டில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 180 பேர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வீடுகளை இழந்த 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்