ஷாருக்கான் சொன்னதால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை கத்தார் மன்னர் விடுவித்தாரா?

x

கத்தார் நாட்டில் உளவு பார்த்த‌தாக முன்னாள் இந்திய கடற்படை வீர‌ர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். மத்திய அரசின் தொடர் பேச்சுவார்த்தையின் பயனாக, தண்டனை குறைக்கப்பட்டு, பின்னர், விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், 8 இந்தியர்களை விடுதலை செய்த‌தன் பின்னணியில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் இருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. தனிப்பட்ட முறையில் சென்று, 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கத்தார் மன்னரிடம் கோரிக்கை விடுத்த‌தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு ஷாருக் கான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியதால் இது சாத்தியமானதாகவும், 8 பேர் விடுதலை தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷாருக் கான் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்