புதினை தூங்கவிடாமல் செய்யும் ஒருவரின் மரணம் - வெடித்தது புது பூகம்பம்

x

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அரசியல் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட "சோகத்தின் சுவர்" நினைவகத்தில் நவால்னி நினைவாக ரஷ்யர்கள் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் ஜார்ஜியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம், ரஷ்ய கூட்டமைப்பு நலன்கள் பிரிவு அமைந்திருக்கும் கட்டடத்திற்கு வெளியே சுமார் 500 பேர் ஒன்றுகூடி நவால்னிக்கு அஞ்சலி செலுத்தினர்...

மேலும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே நவால்னி ஆதரவாளர்கள் அவரது புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி புதினுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

போர்ச்சுகலின் லிஸ்பனில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் கூடிய மக்கள் நவால்னிக்கு ஆதரவாக மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்