உலகை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்.. 149 உயிர் பலி.. நிலைகுலைந்த புதின்.. 11 தீவிரவாதிகள் கைது

x

மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் 149 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட 11 ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரோகஸ் சிட்டி ஹாலில், ராக் இசைக்குழுவான Picnic-ன் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது முகமுடி அணிந்து, ஆயுதங்களுடன் அரங்கிற்குள் புகுந்த 4 பேர் பயங்கர ஆயுதங்களை கொண்டு அரங்கில் அமர்ந்திருந்த மக்களை நோக்கி கணமூடித்தனமாக சுட்டனர். கையெறி குண்டுகளை அரங்கை நோக்கி வீசியதில், அரங்கத்தின் சில பகுதி பற்றிக் கொண்டு எரிந்தது... இந்த சம்பவத்தில் இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்