இந்தியாவுக்கு சிக்கல்... சாத்தானை களமிறங்கிய அமெரிக்கா - பற்றியெரியும் செங்கடல் | Red Sea

x

உலக வர்த்தகத்தில் 12 சதவீதம் செங்கடல் பகுதியில் உள்ள சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. காசா

போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கூறி, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை ஏமனைச் சேர்ந்த ஹவுதி இயக்கம் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹவுதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆசியாவில் இருந்து ஐரோப்பா செல்லும் சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாக செல்லாமல், ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிக் கொண்டு செல்கின்றன. இதன் காரணமாக சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 44 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இந்திய ஐரோப்பிய

வர்த்தகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்