`காசாவை சிதைக்கும் இஸ்ரேல்'...பதிவியை ராஜினாமா செய்த பாலஸ்தீன பிரதமர்

x

பாலஸ்தீன் பிரதமர் முகமது ஸ்டெய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் படையெடுத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு, புதிய ஆட்சி அமைக்க பிரதமர் முகமது ஸ்டெய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், போருக்குப் பிறகு பாலஸ்தீனத்தை நிர்வாகம் செய்ய புதிய அரசு அமைய வேண்டும் என்றும் ஸ்டெய்யே கூறியுள்ளார். அதன்படி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அதிபர் முகமது அப்பாஸிடம் கடித‌த்தை ஒப்படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்