வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! உச்சகட்ட பதட்டத்தில் தென்கொரியா, ஜப்பான் | North Korea

x

வடகொரியா மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது... கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடலை நோக்கி வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்... ஜப்பானின் கடலோர காவல்படையும் இதே தகவலைத் தெரிவித்துள்ளது... இதுகுறித்த விரிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் கிஷிடா, வடகொரியாவின் தொடர் ஏவுகணை நடவடிக்கைகள் பிராந்தியத்திலும் சர்வதேச சமூகத்திலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிப்பதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்