"கச்சத்தீவை மீட்பது குறித்து இந்தியாவில் யாரும் பேசவில்லை"- இலங்கை அமைச்சர்

x

"கச்சத்தீவை மீட்பது குறித்து இந்தியாவில் யாரும் பேசவில்லை"- இலங்கை அமைச்சர்

#kachchatheevu #srilanka #india #thanthitv

கச்சத்தீவை மீட்பது குறித்து இந்தியாவில் யாரும் பேசவில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நுவரெலியா - ஹட்டன் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கச்சத்தீவு பிரச்னை 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது என்றும், அதனை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது யார் என்ற அரசியல் விவாதம்தான் இந்தியாவில் நடந்து வருகிறது என்றும், கச்சத்தீவை மீட்பது குறித்து யாரும் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்