நாட்டையே உலுக்கிய சுரங்க விபத்து - மாட்டிக்கொண்டு போராடும் 40 உயிர்கள்-"இன்னும் 15 மணி நேரம் தான்.."

x

உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க நவீன இயந்திரங்கள் உதவியுடன் 25 மீட்டர் ஆழத்திற்கு துளையிடப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

சுரங்க இடிபாடுகள் வழியாக துளையிட்டு 3 அடி அகலம் கொண்ட குழாயை உள்ளே செலுத்தி அதன் மூலம் தொழிலாளர்கள் 40 பேரையும் வெளியேற்ற மீட்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர்.

நவீன இயந்திரங்களின் உதவியுடன் சுரங்கத்தை துளையிடும் பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த 15 மணி நேரத்திற்குள் சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கு 70 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு குழாய்களை புதைக்க வேண்டியுள்ள நிலையில், இதுவரை 25 மீட்டர் ஆழத்திற்கு துளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்