தீராத வெறி..அடங்காத ஆத்திரம்.. 24 மணி நேரம்..! 448 பேர்..! கொத்துக்கொத்தாக பறிபோகும் உயிர்கள்!

x

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹிகாரி தெரிவித்துள்ளார். தெற்கு கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் படைப்பிரிவை நோக்கி இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தங்கள் தரப்பில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், கடந்த 24 மணிநேரத்தில், காசாவில் 163 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்