பொதுநிகழ்ச்சியில் அரங்கேறிய கொடூரம்... ஆபத்தில் பெண்கள், குழந்தைகள் - பரபரப்பு ட்ரோன் காட்சி

x

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள கான்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கான்சாஸ் நகரத்தில், பிரம்மாண்ட அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஆயூதங்களுடன் அங்கு வந்த இருவர், திடீரென கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், ஒருவர் உயிரிழந்தார். குழந்தைகள், பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பு, அணிவகுப்புக்காக, சாலையில் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்