ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக 2 கன்னி மேரி சிலைகள்... புயலை கிளப்பிய பாதிரியாரின் செயல்

x

இத்தாலியின் அவெல்லினோ மாகாணத்தில் உள்ள கபோகாஸ்டெல்லோ டி மெர்கோக்லியானோ கிராமத்தில் உள்ள புனிதர்கள் பீட்டர் மற்றும் பால் தேவாலயத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது... வழக்கமாக ஜோசப் மற்றும் மேரியின் சிலையுடன் குழந்தை ஏசுவின் உருவம் வைக்கப்படும்... ஆனால் தங்கள் திருச்சபைகளில் பிரிந்த மற்றும் விவாகரத்து செய்யப்பட்டவர்களின் குழந்தைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்களின் குழந்தைகளைப் பார்ப்பதாகக் கூறும் பாதிரியார் விட்டலியானோ டெல்லா சாலா, மேரி மற்றும் ஜோசப் சிலைகளுக்குப் பதிலாக 2 மேரி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்... பாதிரியாரின் இச்செயல் பழமைவாத கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்