இத்தாலியை திக்குமுக்காட வைத்த இஸ்ரேல் போர்..! கொதித்தெழுந்த மக்கள்... வெடித்த வன்முறை

x

இத்தாலிய வடக்கு நகரமான விசென்சாவில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது... வர்த்தக கண்காட்சிக்கு வெளியே பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்ள் ஒன்று கூடி போராடிய நிலையில், அவர்களைக் கலைக்க முற்பட்ட போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது... தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்... அப்பகுதியே கலவர பூமி போல் காட்சியளித்தது. கண்காட்சியில் இஸ்ரேலிய பெவிலியன் இருப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்