இஸ்ரேலை பழிதீர்க்க இறங்கிய ஈரான்...இந்தியாவுக்கு பேரிடியாக வந்த செய்தி உடனே களத்தில் குதித்த இந்தியா

x

ஈரானால் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பலில், 17 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில், ராணுவ தளபதி உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியின் ஹோர்மூஸ் ஜலசந்தியில், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான MSC ARIES என்ற சரக்கு கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. அந்த கப்பலில் 25 ஊழியர்கள் இருப்பதாகவும், அதில் 17 பேர் இந்தியர்கள் என்றும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கப்பலில் இருக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக, ஈரான் அரசுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பேசி வருவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்